×

தேர்தலில் வெற்றி பெறப்போவது வாக்கு ஜிகாத்தா அல்லது ராம ராஜ்ஜியமா என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும் : பிரதமர் மோடி பரப்புரை

போபால் : நாட்டில் வாக்கு ஜிஹாத் தொடருமா அல்லது ராமராஜ்யம் தொடருமா என்பதை முடிவு செய்யுங்கள் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மத்திய பிரதேச மாநிலம் கார்கோனில் நடந்த தேர்தல் பொதுக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி,பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்தியாவிற்கு எதிராக மிரட்டல்கள் விடுத்து வருவதாக கூறினார். காங்கிரஸ் கட்சி சில குறிப்பிட்ட மக்களை தூண்டிவிட்டு தமக்கு எதிராக வாக்களிக்கும்படி கூறுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். காங்கிரஸ் கூட்டணி நம்பிக்கையின்மையால் சூழப்பட்டுள்ளதாகவும் தமக்கு எதிராக குறிப்பிட்ட பிரிவினரை தூண்டிவிடுவது தான் ஜனநாயகமா என்றும் மோடி கேள்வி எழுப்பினார்.

மேலும் மோடி பேசுகையில் “காங்கிரஸின் பயங்கரமான நோக்கங்கள், சதிகளை மக்கள் பரிந்துகொள்ள வேண்டும். இண்டியா கூட்டணிக் கட்சிகள் தத்தம் வாரிசுகளைக் காப்பாற்றவே தேர்தலில் போட்டியிடுகின்றன. அவர்களுக்கு மக்கள் நலன் பற்றி அக்கறை இல்லை. மக்களின் மகிழ்ச்சி அல்லது துக்கத்தைப் பற்றி இண்டியா கூட்டணி கவலைப்படுவதில்லை. காங்கிரஸ் கட்சிக்கு பாகிஸ்தான் மீது அன்பும் ராணுவத்தின் மீது வெறுப்பும் ஏற்பட்டுள்ளது. இளைஞர்களின் எதிர்காலத்தை உயர்த்தி, 25 கோடி மக்களை வறுமையில் இருந்து பாஜக விடுவித்துள்ளது. இந்தத் தேர்தலில் வெற்றி பெறப்போவது வாக்கு ஜிகாத்தா அல்லது ராம ராஜ்ஜியமா என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும். ஏனெனில் இந்தியா வரலாற்றில் திருப்புமுனையை சந்திக்கும் காலகட்டத்தில் இருக்கிறது.” என்றார்,

The post தேர்தலில் வெற்றி பெறப்போவது வாக்கு ஜிகாத்தா அல்லது ராம ராஜ்ஜியமா என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும் : பிரதமர் மோடி பரப்புரை appeared first on Dinakaran.

Tags : Jikatha ,Rama Rajjiya ,Modi ,Bhopal ,Ramarajya ,MADHYA PRADESH STATE OF KARKON ,MODI SAID ,INDIA ,Jikata ,PM ,Dinakaran ,
× RELATED இந்திய மகள்களின் பாதுகாப்பை விட...